
தாம்பரம்/காஞ்சி/திருவள்ளூர்: திமுக அரசு தமிழ்மொழியைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி தாம்பரம், காஞ்சி, திருவள்ளூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாம்பரம் சண்முக சாலையில் செங்கை மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் வேதசுப்பிரமணியம் தலைமையில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து கைகளில் பதாகை ஏந்தி 100-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், ‘மத்திய கல்விக் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும், தமிழ் மொழியை அழிக்க வேண்டாம்’ போன்ற கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் திமுக அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். இதில் வேதசுப்பிரமணியம் பேசியபோது, “தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்காக நமது தலைவர் அண்ணாமலை பாடுபட்டு வருகிறார். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்