
சென்னை: காங்கிரஸ் கட்சியில் 50 சதவீதம் பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உதய்ப்பூர் மாநாட்டுப் பிரகடனமே எனது தேர்தல் வாக்குறுதி என்று தமிழக காங்கிரஸாரிடம் ஆதரவு கோரிநேற்று சென்னை வந்த காங்கிரஸ்கட்சித் தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வரும் 17-ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 9 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 700 வாக்காளர்கள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்