
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் வடக்காமணி மூல வீதியில் உள்ள மாநகராட்சியின் பல்லடக்கு வாகன காப்பகம் நேற்றுமுதல் செயல்பட தொடங்கியது. பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்கள் வாகனங்களை இந்த பல்லடுக்கு வாகன காப்பகத்தில் நிறுத்தி செல்கிறார்கள்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்கள் கார்கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். அவர்கள் சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்தி செல்வதால் கோயிலை சுற்றிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதனால், மாநகராட்சியின் பழைய சென்டர் மார்க்கெட்டில் தற்போது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்லடுக்கு வாகன காப்பகம் கட்டப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்