
சென்னை: சிப்காட் போன்ற வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் லாபத்தில் பங்கு கொடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசின் திட்டக்குழுவுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் தாலுகா வல்லம்கிராமத்தில் சிப்காட் அமைக்க கடந்த 1997-ல் வசந்தா கங்காதரன் என்பவருக்கு சொந்தமான 19.08 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அந்த நிலத்தில் 1.5 ஏக்கருக்கு மட்டுமே கடந்த 2016-ல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்