
கோவை: கோவையில் ரயில்வே மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, மாநகராட்சி நிர்வாகத்துக்கு உதவ தயாராக உள்ளதாக பம்ப்செட் தொழில்துறையினர் தெரிவித்தனர்.
கோவை மாநகரில் மழைக்காலங்களில் லங்கா கார்னர், காட்டூர் புரூக்பாண்ட் சாலை, அவிநாசி சாலை ரயில்வே மேம்பாலங்களின் கீழ்பகுதியில் மழைநீர் குளம்போல தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சினைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. சாதாரண வகை மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்ற கால தாமதமாகிறது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் விரும்பினால் தேவையான ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளதாக பம்ப்செட் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்