
கிருஷ்ணகிரி: கல்குவாரியை மூட வலியுறுத்தி, தேன் கனிக்கோட்டை அருகே கிராம மக்கள் 5-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கிருஷ்ணகிரி எம்பி பங்கேற்றார். இதனிடையே, புல தணிக்கை செய்ய குழு அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தேன்கனிக்கோட்டை தாலுகா கொரட்டகிரி கிராமத்தின் அருகே உள்ள 6 கல்குவாரிகளை மூட வலியுறுத்தியும், இக்கிராமத்தின் வழியாக கனரக வாகனங்கள் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரியும் அக்கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறி ஊருக்கு வெளியில் கூடாரம் அமைத்து கடந்த 11-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்