
சென்னை: காசிக்கும் தமிழகத்துக்குமான பண்டைய தொடர்புகளை புதுப்பிக்கும் வகையில், காசியில் ஒரு மாதம் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
காசி தமிழ் சங்கமம் குறித்து அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதத்தின் செம்மைமிக்க பரிணாமப் பயணத்தில், தமிழகத்தின் பங்கு மகத்தானது. ராமேஸ்வரத்துக்கும், காசிக்கும் இடையில்ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்துள்ளனர். காசி- ராமேஸ்வர யாத்திரை, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத அங்கமாகவே பார்க்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்