
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தில் நேற்று 43 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் கார் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில், வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மத அடிப்படைவாதிகள், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாடு உடையவர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்