Friday, November 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/18/large/899866.jpgசேலம் | ஒரு லட்சம் மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி: நோய் தாக்குதலில் இருந்து தற்காக்க கால்நடை துறை துரிதம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் பெரியம்மை நோய் தாக்குதலில் இருந்து மாடுகளை தற்காக்க வேண்டி கால்நடை துறை மூலம் முதல்கட்டமாக ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஆறு லட்சம் மாடுகள்: தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு தொழிலில் முன்னிலையில் சேலம் மாவட்டம் உள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் ஆறு லட்சம் மாடுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். சேலம் மாவட்ட கால்நடை துறை மூலம் சேலத்தில் கால்நடைகளுக்கான பன்முக மருத்துவமனையும், ஓமலூர், மேட்டூர், ஏற்காடு, வீரபாண்டி, எடப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி ஆகிய ஏழு இடங்களில் கால்நடை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், மாவட்டம் முழுவதும் 149 கால்நடை மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, பருவகால சூழல் மாற்றத்தால் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய் பரவலை முன்கூட்டியே தடுக்கும் பணியில் கால்நடை துறை இணை இயக்குனர் புருஷோத்தமன் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...