
சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிபந்தனைகளுடன் பேரணி நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. இதற்காக, அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அனுமதி கோரியிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்