
சென்னை: மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு 3 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டியிருந்தது. இந்நிலையில் இரு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான குழுக் கூட்டம் பேரவைத் தலைவர் அறையில் நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்கூட்டத்தில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு பங்கேற்றார். மனித உரிமைகள் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜ இளங்கோ, வழக்கறிஞர் வி.கண்ணதாசன் ஆகியோரை நியமிக்க கூட்டத்தில் இக்குழு பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்