
சென்னை: தலித்துகளுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத் தரும் கட்சியாகதமிழக காங்கிரஸ் செயல்படும்என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.அணி தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் காங்கிரஸ்தான் தலித்துகளுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியாக உள்ளது. 1962-ல் டி.சஞ்சீவய்யா, 1969-ல் பாபு ஜெகஜீவன்ராம் ஆகிய தலித்துகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களாக பதவி வகித்து பெருமை சேர்த்தனர். தற்போது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்