
சென்னை: சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் மாநகராட்சிகளின் தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சிகளில் கடந்த மே 30-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்