
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே சாலவான்குப்பத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1,054 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.10.44 கோடியில் தடுப்புச் சுவர் கட்டும் பணியை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும், கிழக்கு கடற்கரை சாலையொட்டி நெம்மேலி கிராமம் உள்ளது. இந்த, கிராமத்தைச் சேர்ந்தவர் ஆளவந்தார். இவர், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கடற்கரையை ஒட்டி சவுக்கு கன்றுகளை பயிரிட்டு, கடற்கரைப் பகுதியை பசுமையாக பராமரித்து வந்தார். இதனைப் பார்த்த ஆங்கிலேயே அதிகாரிகள் இவருக்கு இவர் பராமரித்து வந்த பகுதிகளை உள்ளடக்கி 1,054 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கி ஆளவந்தாரை கவுரவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்