
சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி, போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் 1.17 லட்சம் ஊழியர்களுக்கு ரூ.7.01 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் கே.கோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்