Sunday, January 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/09/large/926719.jpgகோவை - நாகர்கோவில் ரயில் 3 நாட்கள் பகுதியளவு ரத்து

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மதுரை-தூத்துக்குடி, திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் கோவையில் இருந்து ஜன.9,10,11-ம் தேதிகளில் காலை 8 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்:16322), ஈரோடு - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் கோவை முதல் ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். ஈரோடு முதல் நாகர்கோவில் வரை இயக்கப்படாது. இதேபோல, நாகர்கோவிலில் இருந்து ஜன.9,10,11-ம் தேதிகளில் கோவை புறப்பட்டு வர வேண்டிய ரயில் (எண்:16321), நாகர்கோவில் - ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. மாறாக, ஈரோட்டில் இருந்து புறப்பட்டு, கோவை வரை இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...