
சென்னை: அரசியல் இயக்கங்களைப் போல் மொழியைக் காப்பாற்ற வேண்டிய கடமை எழுத்தாளர்களுக்கும் இருக்க வேண்டும் என சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான46-வது சென்னை சர்வதேச புத்தகக்காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்