
கோவை: கோவையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.24.70 கோடி மதிப்புள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தை இந்துசமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள பரமேஸ்வரன்பாளையத்தில் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயி்ல் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான மொத்தம் 24.7 ஏக்கர் இடம், பரமேஸ்வரன்பாளையம் அருகேயுள்ள தேவராயபுரம் கிராமத்தில் 4 பகுதிகளாக அடுத்தடுத்துள்ளது. 4 இடங்களும் விவசாய நிலமாக இருந்தாலும், 2 இடங்கள் மட்டுமே முழு விவசாய பயன்பாட்டில் உள்ளது. வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான மேற்கண்ட 4 இடங்களையும் அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி, சுந்தர்ராஜ், ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்