
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் விவரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வாய்ப்பு எந்த கட்சிக்கு கிடைக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்