
சென்னை: புத்தாண்டை கொண்டாட மெரினாவில் நேற்று முன்தினம் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர். அப்போது, நெரிசலில் சிக்கிக் காணாமல் போன 20 பேரை போலீஸார் மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தமிழகம் முழுவதும் நேற்று ஆங்கிலப் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதுவும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வந்ததால் கடற்கரை, நீர்த்தேக்கம், பூங்காக்கள், பொழுது போக்கு மையங்களில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டனர். மெரினாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
இதையடுத்து மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான சர்வீஸ் சாலை மற்றும் கடற்கரை மணற்பரப்பில் போலீஸார் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். குறிப்பாக, அண்ணா சதுக்கம், உழைப்பாளர் சிலை அருகில் 2 தற்காலிக கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டு, கடற்கரையில் நிகழும் நிகழ்வுகள், தகவல்கள் சேகரிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்