
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த இரு நாட்களாக நடைபெற இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் காட்டன் சேலை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையேயான 2018 - 2021 ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்து 18 மாதங்களுக்கு மேல் ஆகிறது. அதனால் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்