
சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மேயர் பிரியா தலைமையில் கடந்த 11-ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
அதனடிப்படையில் பிப்.12-ம் தேதி மட்டும் 2,919 தெருக்களில் கொசு ஒழிப்புப் பணிகள், மழைநீர் வடிகாலில் 250 கிமீ நீளத்துக்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள்நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினமும் (பிப்.13) தீவிர கொசுஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்