
திண்டுக்கல்: வீட்டுமனைப் பட்டா வழங்கிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பாசிமாலை அணிவித்து நரிக்குறவர் இன மக்கள் நன்றி தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ச.விசாகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வே.லதா முன்னிலை வகித்தார். அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் தங்கள் குறை களை மனுக்களாக வழங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்