
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால், கூடுதலாக 1,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிஇடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது பயன்படுத்துவதற்காக, கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளியில் இருந்து, கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றை மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி,தேர்தல் பார்வையாளர் சுரேஷ்குமார் சதீவ் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்