
சேலம்: சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தடா பெரியசாமியை கைது செய்ய வலியுறத்தி சாலைமறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டனர். மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை கொடும்பாவியை விசிக-வினர் எரிக்க முயன்றதை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
விசிக தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசிய, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தடா பெரியசாமியை கைது செய்ய வலியுறத்தி சேலம் ஒருங்கிணைந்த விசிக சார்பில் பேரணி மற்றும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை விசிக -வினர் சேலம் அண்ணா பூங்கா அருகில் திரண்டனர். அவர்களை மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்