
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 5-ம் தேதி முதல் அதிமுக பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இது தொடர்பாக கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக அமைப்பு ரீதியாகச்செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், கட்சி அமைப்புகள் செயல்படும் பிற மாநிலங்களிலும் மார்ச் 5, 6, 7, 10, 11, 12-ம் தேதிகளில் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்