
மதுரை: மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில், 2023-24 ம் ஆண்டுக்கான மத்திய ‘பட்ஜெட் - ஓர் அலசல்’ எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நேற்று நடந்தது. தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். முதுநிலை தலைவர் ரத்தினவேல் உள்ளிட்டோர் பேசினர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: மத்திய பட்ஜெட்டை சமுதாயம், பொருளாதாரம், அரசியல் கண்ணாடியில் பார்க்கலாம். பொருளாதாரம், சமுதாய கண்ணாடியில் இங்கு பேசுகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு 4 உந்து சக்திகள் (இன்ஜின்கள்) தேவை. முதலில் மக்களின் நுகர்வு. மொத்த உற்பத்தில் 60% நுகர்வு தான். இரண்டாவது அரசு முதலீடு, 3வது தனியார் முதலீடு, 4 வது ஏற்றுமதி. இந்த 4 இன்ஜின்களும் சில காலம் முழு திறனோடு செயல்பட்டது. தற்போது அரசு முதலீடு என்ற இன்ஜின் மட்டுமே ஒடுகிறது. நுகர்வு சக்தி குறைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்