
சென்னை: தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் துல்லிய வானிலை முன்னறிவிப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சோதனை முறையில், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சென்னையில் மண்டல அளவிலும், புறநகர் பகுதிகளில் தாலுகாஅளவிலும் வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும் முறை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மேலும் துல்லியமாக வழங்க வானிலை ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்