
விருதுநகர்: விருதுநகருக்கு நேற்று வந்த இஸ்ரோ ஆலோசகர் சிவன், அங்குள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில் குடும்பத்துடன் வழிபட்டார். பின்னர், காமராஜர் இல்லத்துக்குச் சென்று, அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் சிவன் கூறியதாவது:
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டப் பணிகள் இந்தியவிண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. நிலவில் ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-3 விண்கலம், விரைவில் விண்ணில் ஏவப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்