Sunday, March 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/12/large/959191.jpgமனிதர்களைபோல் ‘ரேக்ளா ரேஸ்’ காளைக்கு எலும்பு முறிவு சிகிச்சை - வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்த்த அரசு மருத்துவர்

மதுரை: போட்டியில் காயமடைந்து எலும்பு உடைந்த ‘ரேக்ளா ரேஸ்’ காளைக்கு மனிதர்களை போல், அரசு கால்நடை மருத்துவர் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்துள்ளார். காளையை மருத்துவமனைக்கு அழைத்த வர முடியாததால் காளை உரிமையாளர் வீட்டிற்கே சென்று இந்த சிகிச்சையை கால்நடை மருத்துவர் அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கும், காளைகளுக்கும் புகழ்பெற்ற அலங்காநல்லூர் கிராமம் ‘ரேக்ளா ரேஸ்’ போட்டிலும் தற்போது பிரபலமாக இருக்கிறது. தமிழகத்தில் ‘ரேக்ளா ரேஸ்’ போட்டிகள், ஈரோடு, திருப்பூர், கோவை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் அதிகளவு நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளுக்காக அலங்காநல்லூர், பாலமேடு சுற்றுவட்டார ஜல்லிக்கட்டு கிராமங்களிலும் ஏராளமானோர் ‘ரேக்ளா ரேஸ்’ காளைகள் வளர்க்கிறார்கள். வெளிமாவட்டங்களில் நடக்கும் ‘ரேக்ளா ரேஸ்’ போட்டிகளுக்கும் அழைத்து செல்கிறார்கள். இந்த போட்டிகளுக்காக வளர்க்கும் காளைகளை, அவர்கள் விவசாய பணிகளுக்கு பயன்படுத்த மாட்டார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...