
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மின்விபத்தில் தாயை இழந்து ஏற்கெனவே 2 யானைக் குட்டிகள் தவித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு யானைக்குட்டி தாயைப் பிரிந்து தவித்து வருகிறது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மாரண்ட அள்ளி அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை தடுக்க முருகேசன் என்ற விவசாயி தன் நிலத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்திருந்தார். கடந்த 7-ம் தேதி அதிகாலை அவ்வழியே சென்ற 1 ஆண் மற்றும் 2 பெண் யானைகள் இந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தன. அதேநேரம், இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்