
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் சரளைமேட்டைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் துரைசாமி (57). இவர் அப்பகுதியில் வெல்லம் தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார். ஆலையின் ஒரு பகுதியில் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்கும் குடிசைகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் தொழிலாளர் குடிசைகளுக்கு தீ வைத்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதில், 5 குடிசைகள் மற்றும் 3 டிராக்டர்கள் சேதம் அடைந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்