
சென்னை: மகளிர் காவலர் பொன்விழாவை முன்னிட்டு பெண் காவலர்களுக்கான காவல் வருகை அணிவகுப்பு நேரம் மாற்றம், சென்னை, மதுரையில் தங்கும் விடுதி உள்ளிட்ட 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
காவல் துறையில் மகளிர் காவலர்கள் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு காவல் துறை சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், மகளிர் காவலர் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பொன்விழா ஆண்டு சிறப்பு தபால் உறையை வெளியிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்