
மானாமதுரை | சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மண்பாண்டப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதற்கு மண்பாண்டத் தொழிலாளர்கள், வியாபாரிகள் வரவேற்றுள்ளனர்.
மானாமதுரையில் தயாராகும் மண்பாண்டப் பொருட்களுக்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளது. மண்பாண்டத் தொழிலில் மானாமதுரை குலாலர் தெருவைச் சேர்ந்த 325 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மண் பானை, அக்னிச் சட்டி, அகல் விளக்கு, கலைப்பொருட்கள், அடுப்புகள், சுவாமி சிலைகள், சமையல் சட்டிகள், கூஜாக்கள், ஜாடிகள், இசைக்கருவியான கடம் போன்ற 50-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்