
சேலம்: சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரையிலான காலத்தில், ரயில் பயணிகளிடம் நடத்தப்பட்ட டிக்கெட் பரிசோதனையில், டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது, கட்டணம் செலுத்தாமல் சுமைகளை எடுத்துச் செல்வது உள்பட டிக்கெட் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் மொத்தம் ரூ.14.65 அபராதம் வசூலிக்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்டம் வழியாக செல்லும் ரயில்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள், பயணிகளிடம் திடீர் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும், டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில், 53 ஆயிரத்து 598 முறைகேடுகள் கண்டறியப்பட்டு மொத்தம் ரூ.14.65 கோடி அபராதம் வசூலித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்