
சேலம்: ‘வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அச்சுறுத்தி வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழக முதல்வர் வடமாநில தொழிலாளர்களுக்கு சரியான முறையில் பாதுகாப்பு வழங்கி வருகிறார்’ என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் விக்கிரமராஜா ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ஆலோசனை கூட்டத்தில், வரும் மே 5ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெறும் வணிகர் சங்க மாநில மாநாட்டுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் விடுமுறை அளித்து, மாநாட்டு நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்