
சென்னை: மின் கட்டணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தாதவர்களால், வாரியத்துக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கடந்த 10-ம் தேதி தாழ்வழுத்தப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தைத் தாண்டி 10 நாட்களாகியும் 44,732 பேர் கட்டணம் செலுத்தாதது கண்டறியப்பட்டது. குறிப்பாக, வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்இணைப்பின் கீழ் 44,715 பேர் மின் கட்டணம் செலுத்தாதது தெரியவந்துள்ளது. அவர்கள் ரூ.30.91 கோடி நிலுவை வைத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்