
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் மாதாந்திர ஆட்சிமன்றக் குழுக் (சிண்டிகேட்) கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், உயர்கல்வித் துறைச் செயலர் தா.கார்த்திகேயன், பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிண்டிகேட் உறுப்பினர் மாற்றத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அண்ணா பல்கலை. அதிகாரிகள் கூறியதாவது: 2021-ல் சிண்டிகேட் குழுவின் அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுள்ளதால், பல்கலை. சிண்டிகேட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏனெனில், எம்எல்ஏ-க்கள் மட்டுமே சிண்டிகேட் குழுவில் இடம்பெற முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்