
சென்னை: ரூ.20.13 கோடியில் 12 புதிய மற்றும் 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீயணைப்புத் துறை சார்பில், சேலம் - ஆட்டையாம்பட்டி, திருப்பூர் - ஊத்துக்குளி, சிவகங்கை - இளையான்குடி, திருச்சிராப்பள்ளி – வையம்பட்டி, கடலூர் – குமராட்சி, கள்ளக்குறிச்சி – நயினார்பாளையம், விழுப்புரம் – அன்னியூர், மதுரை – திருப்பரங்குன்றம், விருதுநகர் – ஏழாயிரம்பண்ணை, சென்னை – கொளத்தூர், செங்கல்பட்டு – காலவாக்கம், திருவண்ணாமலை – கண்ணமங்கலம் ஆகிய 12 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்