
சென்னை: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் முதல்முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது. இத்தொடர் வரும் ஆக.3 முதல் 12-ம் தேதி வரை சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி சென்னையில் நடத்தப்பட இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: 2023-ம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரை சென்னையில் நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. ஒருகாலத்தில் தென் இந்திய ஹாக்கியின் தலைமையிடமாக சென்னை நகரம் இருந்தது. இங்கு புகழ்பெற்ற பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்