
விருத்தாசலம்: கடலூரில் மீனவர்கள் இடையே கடந்த 2018-ல் ஏற்பட்ட மோதலில், மீனவ பஞ்சாயத்து தலைவரும், அதிமுக பிரமுகருமான பஞ்சநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த எஞ்சிய 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
கடலூரில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி, சிங்காரதோப்பு உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக தேவனாம்பட்டினம் - கடலூர் துறைமுகம் சோனாங்குப்பம் பகுதி மீனவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்