
சென்னை: தமாகா இளைஞரணியின் 15-வது செயற்குழுக் கூட்டம் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசியதாவது: தமாகா கடந்த 9 ஆண்டுகளாக பதவிகளில் இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளைச் செய்து வருகிறது. பல இடங்களில் கட்சியினர் மத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்