
கோவை: தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்துக்கு சென்றுள்ளது. ஸ்டாலின் அதிகம் பேசினால் ஆட்சி போய்விடும் என, பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியது தொடர்பாக அதிமுக துணை பொதுச் செயலாளர் முனுசாமி ஒரு கேள்வியை விடுத்துள்ளார். அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர். எனவே அவர் வெளியிட்டது பாஜகவின் கருத்துதான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்