
சென்னை: விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், நுகர்வோருக்கு அபராதம் வழங்கும் திட்டம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வரைவு அறிக்கை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் விநியோக விதிகளில் புதிய திருத்தங்களைக் கொண்டு வர உள்ளது. இதற்காக வரைவு அறிக்கை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையில் நுகர்வோருக்குச் சாதகமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்