
மதுரை: தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டதற்கு மாநில சுகாதாரத் துறை, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் அலட்சியமே காரணம் என பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு முறை, சிசிடிவி கேமராக்கள், பேராசிரியர் பணியிடம் உள்ளிட்டவற்றில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு அந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்