
சிவகங்கை: காரைக்குடி இளைஞர் ஆன்லைனில் இழந்த ரூ.82,000-த்தை சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார் உடனடியாக மீட்டனர்.
காரைக்குடியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (24). இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என விளம்பரம் இருந்தது. இதையடுத்து ராமமூரத்தி முதலில் குறைவான பணத்தை முதலீடு செய்துள்ளார். அவரது பணம் இரட்டிப்பானது. இதனால் சந்தோஷம் அடைந்த ராமமூர்த்தி பணத்தை எடுக்காமல் தொடர்ந்து 16 தவணைகளில் ரூ.82,400 வரை முதலீடு செய்தார். ஆனால் அதன்பிறகு அந்த பணத்தை எடுக்க முடியவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்