
சென்னை: தமிழர் நலனும், தமிழகத்தின் மேன்மையும்தான் எங்களுக்கு முக்கியம் என்று சிங்கப்பூரில் பேட்டியளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூரில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து, திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். அதற்கான வரைவுத் திட்டத்தை தயாரிக்க ‘போஸ்டன் கன்சல்டிங் குரூப்’ என்ற நிறுவனத்தை பணியில் அமர்த்தியுள்ளோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்