
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஊரை விட்டு தள்ளிவைத் ததாகக் கூறி, 7 குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஊரை விட்டு வெளியேறப் போவதாகவும் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் அருகேயுள்ள நெற்குப்பை பேரூராட்சி பூசணிக்களம் கிராமத்தில் 50 குடும்பங்கள் வசிக்கின்றன. 3 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள கண்மாயில் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சினையில் 7 குடும்பங்களை தள்ளிவைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் சென்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்