Friday, May 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/06/large/986100.jpgஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்ட 7 குடும்பத்தினர் - திருப்பத்தூர் ஆட்சியரிடம் புகார்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஊரை விட்டு தள்ளிவைத் ததாகக் கூறி, 7 குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஊரை விட்டு வெளியேறப் போவதாகவும் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் அருகேயுள்ள நெற்குப்பை பேரூராட்சி பூசணிக்களம் கிராமத்தில் 50 குடும்பங்கள் வசிக்கின்றன. 3 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள கண்மாயில் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சினையில் 7 குடும்பங்களை தள்ளிவைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் சென்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...