
சென்னை: பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அலுவலக உதவியாளர்பணிக்கான நியமன ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவர்முதுகலை தமிழ் பட்டதாரி. இவர்மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச மற்றும் தேசிய அளவிலானபாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்