
திருவள்ளூர்: திருத்தணியில் கல்குவாரி குட்டையில் மூழ்கி மூதாட்டி, இரு பள்ளி சிறுமிகள் என 3 பேர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கமுதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரியார் நகரை சேர்ந்தவர்பாபு (60). இவர் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 10-ம் தேதிஉயிரிழந்தார். இந்நிலையில் பாபுவின் 30-ம் நாள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உறவினர்களான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சந்தைவாசல் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி மல்லிகா (65), மாரிமுத்து மகள் கோமதி (14) மற்றும் விநாயகம் மகள் ஹேமலதா (16) ஆகியோர் நேற்று திருத்தணிக்கு வந்தனர். கோமதி 8-ம் வகுப்பு படித்து வந்தார். ஹேமலதா 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்